ஒட்டுமொத்தமாக பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பித்துள்ளனர். ஒரு லட்சத்து 98,853 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி சமவாய்ப்பு எண் இணையவளையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 13 முதல் 30 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இணையதளத்தில், தரவரிசைப் பட்டியலை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
The post தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு; அமைச்சர் பொன்முடி தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார் appeared first on Dinakaran.