ராமநாதபுரம் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். வாய்ப்பு வழங்கினால் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் என அவர் உறுதியளித்தார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபிநயாவை ஆதரித்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நான்கு சாலை சந்திப்பில் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது மைக் சின்னத்தில் வாக்களிக்குமாறு பாடல் பாடி சீமான் வாக்குசேகரித்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை பாமக வேட்பாளர் சௌமியாவை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
The post மிரட்டியே ஆட்சியை தக்கவைக்கும் பாஜக.. தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பு..!! appeared first on Dinakaran.