90களில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைவதற்கு முலாயம் சிங் யாதவ் காரணமாக இருந்தார் என்பதை அகிலேஷிடம் மம்தா சுட்டிக் காட்டி இருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று டெல்லியில் அகிலேஷ் யாதவை சந்தித்த திரிணாமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் எம்.பி.டெரிக் ஓப்ரையன் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர். அத்துடன் உத்தவ் சிவசேனாவிடமும் ஆட்சி அமைக்கும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இண்டியா கூட்டணிக்குள் கூடுதல் கட்சிகளை சேர்க்குமாறு ஆம் ஆத்மி கட்சியும் வலியுறுத்தி உள்ளது. இதே ஆமோதித்துள்ள அகிலேஷ் யாதவ், இப்போதைக்கு சந்திர பாபுவும் நிதிஷ் குமாரும் மனமார மாட்டார்கள் என்பதால் பாஜகவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் பாஜக எம்பிக்கள் 3 பேர் தங்களோடு தொடர்பில் இருப்பதாக அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஏற்கனவே மராட்டியத்தில் சுயேட்சையாக வெற்றி பெற்ற காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் விஷால் பாட்டில் மீண்டும் காங்கிரசில் இணைந்த நிலையில், பீகார் சுயேச்சை எம்பியான பப்பு யாதவ் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் எந்த நேரத்திலும் பாஜகவுக்கு நெருக்கடி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
The post மத்தியில் ஆட்சி அமைக்க இண்டியா கூட்டணி முயல வேண்டும்.. திரிணாமூல் காங்கிரஸ், உத்தவ் சிவ சேனா, ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.