விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது எனவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீது 24-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 26-ம் தேதி கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற திமுக உறுப்பினர் புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

The post விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: