எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஒப்பந்த பணி: மே 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: சென்னை எழும்பூர் மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கு வருகிற 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை எழும்பூர் மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வார்டு மேனேஜர் பணியில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன. மேலும், தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதிசான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், ‘இயக்குநர் மற்றும் பேராசிரியர், மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும், அரசு தாய் சேய் நல மருத்துவமனை எழும்பூர் சென்னை -600008’ என்ற இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 26ம் தேதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஒப்பந்த பணி: மே 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: