மிதக்கும் எண்ணெய்யை அகற்றுமாறு சிபிசிஎல் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயிலும் எண்ணெய் படிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் பல்வேறு விதிமுறைகளுக்கு உடன்பட்டு, அதை பூர்த்தி செய்தால் மட்டுமே நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். அந்த விதிகளை மீறி சூழலியல் குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது உரிமம் ரத்து, தடை விதித்தல் போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும். வரும் காலங்களில் இதை நடைமுறைபடுத்த வேண்டும்’’ என்றனர்.
The post சூழலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.