இலங்கை சிறையில் இருந்து 27 மீனவர்கள் விடுவிப்பு

காரைக்கால்: காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 5ம் தேதி காரைக்கால் மாவட்ட 8 மீனவர்கள் மற்றும் தமிழகத்தைச் 5 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள் விசைப்படகில் கடலில் மீன் பிடிக்க சென்ற பொழுது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதிலிருந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை கோர்ட் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 28.12.2023 அன்று 13 மீனவர்களும் பருத்தித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 13 மீனவர்களையும் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

மேலும் கடந்த 16.12.2023 அன்று காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மற்றும் தமிழகத்தைச் 3 மீனவர்கள் என மொத்தம் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 28.12.2023 அன்று அந்த 14 மீனவர்களும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. 27 மீனவர்களும் ஓரிரு நாளில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

The post இலங்கை சிறையில் இருந்து 27 மீனவர்கள் விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: