இலங்கை சிறையில் அடைபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: எடப்பாடி டிவிட்

சென்னை: இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூகவளைதள பதிவு: பூம்புகார் மீனவர் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை ஒரு சில நாட்களுக்கு முன் 37 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவ மக்கள் பிரச்னையில் விரைந்து செயல்பட்டு, ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இலங்கை சிறையில் அடைபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: எடப்பாடி டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: