இன்று அதிகாலை கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இது குறித்து ராமேஸ்வரம் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மணல் திட்டு பகுதிக்கு படகில் சென்ற போலீசார், 3 குழந்தைகள் உள்பட தம்பதியை மீட்டு இன்று காலை 10 மணியளவில் கடற்கரைக்கு அழைத்து வந்தனர். இதை தொடர்ந்து மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
The post இலங்கையில் இருந்து 3 குழந்தைகளுடன் தம்பதி தனுஷ்கோடி வருகை: மரைன் போலீசார் மீட்டு விசாரணை appeared first on Dinakaran.