தீபாவளிக்கு இறைச்சி அதிகரிக்க வாய்ப்பு: புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு வியாபாரம்

புதுக்கோட்டை: புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கியதால் புதுக்கோட்டையில் ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளி கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

இதனை வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர். இந்த ஆட்டு சந்தையில் இன்று மட்டும் ரூ.2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை விரைவில் வரவுள்ளதால் ஆட்டு சந்தைகளில் ஆடு விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றும் ஆட்டு இறைச்சி விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தீபாவளிக்கு இறைச்சி அதிகரிக்க வாய்ப்பு: புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு வியாபாரம் appeared first on Dinakaran.

Related Stories: