ஆர்கே பேட்டை பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு: மின் நுகர்வோர் கூட்டத்தில் உறுதி


திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரக்கோணம் சாலையில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைத்தீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார். திருவள்ளூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் நுகர்வோரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். இதில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருவாலங்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர் பங்கேற்று மின் தொடர்பான 8 புகார் மனுக்களை வழங்கினர். இதில், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஜனகராஜகுப்பம் ஊராட்சிமன்றத் தலைவர் ராமசாமி தலைமையில் தியாகாபுரம் கிராமமக்கள் பங்கேற்று கிராமத்தில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு கோரி, கோரிக்கை மனு வழங்கினர்.

இதனை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தியாகாபுரத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதில் உதவி செயற்பொறியாளர்கள், ராஜேந்திரன், கோடீஸ்வரி, செந்தில்குமார், கண்ணன், ஆறுமுகம், இளநிலை பொறியாளர்கள், மின்நுகர்வோர் கலந்துகொண்டனர்.

The post ஆர்கே பேட்டை பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு: மின் நுகர்வோர் கூட்டத்தில் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: