சென்னை: தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் நீக்கப்பட்டு, புதிய மாவட்ட பொறுப்பாளராக ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தென்காசி தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் சிவபத்மநாபன் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் தென்காசி தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post சிவபத்மநாபன் நீக்கம் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்: தலைமைக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.