அப்போதே ஏன் அனுப்பவில்லை என்று நீதிபதிகள் கேட்டதற்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஜனவரி 24ம் தேதி சாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் நகர கூட முடியவில்லை. அதனால், அவரை ஏர் ஆம்பலன்ஸ் மூலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்று கூறி சாந்தனின் மருத்துவ அறிக்கைகளையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். மேலும், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நோடல் அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும், இதுகுறித்து அறிக்கையை வரும் 4ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
The post சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப உதவி: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.