எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச.7: பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கோரி எஸ்டிபிஐ. கட்சியினர் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட த்தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். மாவட்ட ச்செயலாளர் கமால் பாஷா வரவேற்றார். பாப்புலர் பிரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் சிறப்புரையாற்றினார். விசிக மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்டத்தலைவர் அப்துல்லா ஸாஆதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று, முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்தையொட்டி, மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: