முதலாவதாக சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலுக்கு மாலை 3.30 மணியளவில் அமித்ஷா மனைவியுடன் வந்தார். அங்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து சத்தியகிரீஸ்வரர், ராஜராஜேஸ்வரி மற்றும் காலபைரவர் கோயிலில் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்துகொண்டார். அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கோட்டை பைரவர் கோயிலுக்கு காரில் சென்றார். அங்கு அமித்ஷா தனது பெயர், ராசி, நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் நடுரோட்டில் சிதறு தேங்காய் உடைத்து கோட்டை பைரவரை மீண்டும் வழிபட்டார். தரிசனத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டரில் திருச்சி விமான நிலையம் சென்றார். மாலை 5.25 மணியளவில் திருப்பதிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்றார். அமித்ஷா வருகையையொட்டி திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கடைகளும் மூடப்பட்டது.
The post திருமயம் கோயில்களில் அமித்ஷா மனைவியுடன் சாமி தரிசனம் appeared first on Dinakaran.