இதன் மூலம் உலககோப்பை வரலாற்றில் அவர் பெற்ற முதல் டக் அவுட் இது ஆகும். இந்த நிலையில் கடந்த போட்டியில் ரன் அடிக்காமல் இருந்ததற்கு சேர்த்து இன்றைய ஆட்டத்தில் விராட் கோஹ்லி இரண்டு முக்கிய சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோஹ்லி சதம் அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை சமன் செய்து விடுவார். சச்சின் 49 சதங்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோஹ்லி தற்போது 48 சதங்களை அடித்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிராக கோஹ்லி சிறப்பாக ஆடி வருகிறார்.
ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக கோஹ்லி 10 சதங்களை அடித்திருக்கிறார். மேலும் 49வது சதத்தை இன்று கோஹ்லி தொட்டால் அதிவேகமாக இந்த மைல்களை தொட்ட வீரர் என்ற சாதனையும் கோஹ்லிக்கு சேரும். அதேபோன்று கோஹ்லி இன்றைய ஆட்டத்தில் 34 ரன்கள் அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் ஆயிரம் ரன்களை தொட்டுவிடுவார். இந்த ஆண்டு கோஹ்லி மேலும் 34 ரன்கள் சேர்த்தால் 8 முறை ஆயிரம் ரன்கள் தொட்ட வீரர் என்ற பெருமையை பெற்று சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சச்சின் சாதனையை தகர்க்க கோஹ்லிக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.