ஆனால், கார்கிவ் ஆளுநர் கூறுகையில், கார்கிவ் புறநகர் பகுதியில் ரஷ்ய ராணுவத்தின் குண்டுவீச்சில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர் என்று தெரிவித்தார். ரஷ்யாவின் கிராஸ்னோடார்,பெல்கோரோடு மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமீயா தீபகற்பத்தை குறி வைத்து ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. கிராஸ்னோடாரில் உக்ரைனின் 57 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. கிரீமியாவில் உக்ரைனின் 9 ஏவுகணைகள், 3 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. மேலும்,பெல்கோரோடில் உக்ரைனின் டிரோன் தாக்குதலில் ஒரு தேவாலயம் சேதமடைந்தது. எனினும் உயிர் சேதம் எதுவும் இல்லை. அங்கு 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
The post ரஷ்யா- உக்ரைன் டிரோன் யுத்தம்: 90 டிரோன்கள் அழிப்பு appeared first on Dinakaran.