பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரவுன் பல்கலைகழகம் மற்றும் எம்ஐடியில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களை தொடர்ந்து கிரீன் கார்டு திட்டத்தை உடனடியாக நிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைகழக வளாகத்தில் சமீபத்தில் ஒருவர் துப்பாக்கிசூடு நடத்தினார். இதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். அதே போல் எம்ஐடி கல்வி நிறுவன பேராசிரியராக இருந்த நூனோ கோம்ஸ் லூரைரோ என்பவரை அவரது வீட்டுக்கு அருகில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இந்த துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவர் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் பிரவுன் பல்கலைகழக துப்பாக்கிடு சம்பவத்தில் ஈடுபட்டவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த நெவேஸ் வாலன்டே என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் பிரவுன் பல்கலைகழகத்தில் பயின்றவர். மேலும் நூனோ கோம்ஸ் லூரைரோ உடன் போர்த்துக்கீசிய பல்கலைகழகத்தில் ஒன்றாக படித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் நெவேஸ் வாலன்டேயின் கடந்த 2017ம் ஆண்டு கிரீன் கார்டு குலுக்கல் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர் என்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, கிரீன் கார்டு திட்டத்தை உடனடியாக நிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார்.

Related Stories: