ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக ஆணையத்துக்கு அறிக்கை: சத்ய பிரதா சாகு

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் ஓட்டல் மேலாளரிடம் நேற்று ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும். மேலும், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக பூத் சிலிப் வழங்கும் பணி 24 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1.46 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

The post ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக ஆணையத்துக்கு அறிக்கை: சத்ய பிரதா சாகு appeared first on Dinakaran.

Related Stories: