இதையடுத்து மாணவர்கள் 4 பேரை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் என்பதும் பஸ் டே கொண்டாடுவதற்காக வந்தோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், தாம்பரம் அண்ணாநகர், பொன்னேரி என்ஜிஓ. நகர், பொன்னேரி பனப்பாக்கத்தை சேர்ந்தவர், திருவள்ளூர் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்தனர். கத்திகளை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு, ‘‘தங்கள் கல்லூரியில் படித்துவரும் திலீப், பூவின், ரவி ஆகியோரிடம் வாங்கியதாக தெரிவித்தனர். இதுசம்பந்தமாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதற்காக கத்தி வைத்திருந்தார்கள், மற்ற கல்லூரி மாணவர்களிடம் மோதல் உள்ளதா அல்லது பஸ் டே கொண்டாடும்போது கத்தியை வீசி ரிலீஸ் எடுக்க வைத்திருந்தார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு; பேருந்து நிலையத்தில் கத்தியுடன் கல்லூரி மாணவர் 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.