விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆர்கே பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம், கல்வி மேலாண்மைக்குழு தலைவர் அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நாடகம், சாகச நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன், சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியர் விநாயகம், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மணிகண்டன், பள்ளி மேலாண்மைக்குழு துணை தலைவர் மோகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: