நாட்டின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி உரை நம்பிக்கை அளிக்கிறது: ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரை பாராட்டுக்குரியது. மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய சக்திகள் குறித்தும் பல்வேறு முக்கிய அம்சங்கள் உரையில் இடம் பெற்றிருந்தன. சீர்திருத்தம், செயல்பாடு, வேளாண், கல்வி, வேலைவாய்ப்பு, போன்றவற்றை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதால் அவரை பாராட்டுகிறேன். ஒட்டு மொத்தமாக, நாட்டு மக்களுக்கும், நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அவரது உரை அமைந்திருக்கிறது.

The post நாட்டின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி உரை நம்பிக்கை அளிக்கிறது: ஜி.கே.வாசன் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: