இந்நிலையில், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு பேருந்துகளில் செல்ல தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி 13,184 சிறப்பு பேருந்துகள் உட்பட 19,484 பேருந்துகள் இயங்க தொடங்கின. தமிழ்நாட்டின் பிற இடங்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
The post பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு பேருந்துகளில் செல்ல 1.25 லட்சம் பயணிகள் முன்பதிவு..!! appeared first on Dinakaran.