காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை முறையாக பராமரிக்காதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை முறையாக பராமரிக்காதது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை பழைய காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தனது மகனை பொய்யான வழக்கில் கைது செய்து அடித்த வழக்கில் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்கக் கோரி தாய் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் கோரும் சம்பவ நாளன்று சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை முறையாக பராமரிக்காதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: