விபத்தில் காயமடைந்தவர்களை மதுராந்தகம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர்: வாலாஜாபாத் பகுதியை சேர்த்தவர் தனசேகர். அரசு பேருந்து டிரைவரான இவர், நேற்று தாம்பரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் தடம் எண்:55எஸ் பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வண்டலூர்- வாலாஜாபாத் சாலை வழியாக ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பண்ருட்டி அருகே கண்டிகை பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நின்றிருந்த கனரக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கிய விபத்தில், பேருந்தில் வந்த டிரைவர், கண்டக்டர், பயணிகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுராந்தகம், ஒரகடம் அருகே சாலை விபத்தில் 12 பேர் படுகாயம் appeared first on Dinakaran.