இதன்மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல குடும்பத் தலைவிகள் தங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்தனர். அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்தது. இந்நிலையில் தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு வருகிற 10ம் தேதி ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்திருந்த நிலையில் 2 லட்சம் பேருக்கு இம்மாதமே உதவித்தொகை கிடைக்கும். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளது. தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும்” என்றார். அதன்படி, வரும் 10ம் தேதி முதல் 1.15 கோடி மகளிருக்கு 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேருக்கு ரூ.1000: வரும் 10ம் தேதி வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.