தொண்டி, மே 13: தொண்டி புதுக்குடியை சேர்ந்தவரை வெடிமருந்து பறிமுதல் வழக்கில் தொண்டி போலீசார் கைது செய்தனர். தொண்டி பேரூராட்சி புதுக்குடி பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வீடுகளில் தொண்டி போலீசார் சோதனை செய்தனர். அப்போது செந்தில்குமார் என்பவரின் வீட்டில் 100 ஜெலட்டின், 200 டெட்டனேட்டர், 60 மீட்டர் வயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முத்துகுமார், அப்பாஸ், காளீஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் இச்சகுடி கிராமத்தில் பதுங்கியிருந்த செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.
The post வெடிமருந்து வழக்கில் ஒருவர் கைது appeared first on Dinakaran.
