×

பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு தராத விவகாரம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழக்கு: பெப்சி பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை தொடங்கி இருப்பதாக பெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும், ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி பெப்சி கடிதம் அனுப்பி இருந்தது.

இதனால் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படட்டது. அந்த மனுவில், பெப்சி அமைப்புக்கு எதிராக சில தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளது. அதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறி பெப்சி அமைப்பினர் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது சட்ட விரோதமானது. இதன் காரணமாக ஏப்ரல் 8ம் தேதி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பு பணிகள் முற்றிலும் முடங்கி, மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்துக் கொடுக்குமாறு பெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும்.

படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளில் தலையிட பெப்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, மே 7ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பெப்சி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்களுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

The post பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு தராத விவகாரம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழக்கு: பெப்சி பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Filmmakers Association ,Pepsi ,Chennai ,Tamil Filmmakers Association ,Tamil Nadu Film Workers' Association ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்