×

எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ராமநாதபுரம்: ஒன்றிய பட்ஜெட்டில் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதத்தில் இருந்து 100% ஆக உயர்த்தப்படும் என்ற அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காப்பீடு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதத்தில் இருந்து 100% ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பாக நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரத்தில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். கிளை செயலாளர் பிரதாப் பேசினார். கிளை பொறுப்பாளர் ராஜேஸ் செல்வகுமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் முகவர்கள் கலந்து கொண்டனர்.

The post எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : LIC ,Ramanathapuram ,Union Budget ,Finance Minister ,Nirmala Sitharaman ,Union Budget… ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு