சென்னை : இ-பைலிங் கட்டாயமாக்கப்பட்டது தொடர்பாக பொங்கலுக்கு பின் முடிவெடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இ-பைலிங் நடைமுறையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இ-பைலிங் முறையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பொங்கலுக்குப்பின் முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
