×

பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 77,392 பேர் முன்பதிவு!

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 77,392 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதால், முன்பதிவு எண்ணிக்கை கணிசமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பண்டிகை முடிந்து ஊர் திரும்பவும் இதுவரை 58,124 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

Tags : Pongal festival ,Chennai ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்