இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, கூத்தங்குழி, பெருமணல், பஞ்சல் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 8,500 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பைபர் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு உவரி, கூடன்குளம், பஞ்சல், கூத்தங்குழி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
The post நெல்லை மாவட்டத்தில் 10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் appeared first on Dinakaran.