இந்நிலையில் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் சக்தி ஆனந்தனை சில நாள் முன் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே மைவி3 ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் விஜயராகவன், அரசியல் கட்சி தொடங்குவதாகவும், முதலீட்டாளர்களை கட்சி உறுப்பினர்களாக மாற்ற உள்ளதாகவும் யூடியூபில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜயராகவன் விதிமீறி முதலீடு குவித்ததாக சிலர் கோவை மாநகர போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் மதுரையில் விஜயராகவனை நேற்று முன் தினம் இரவு கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் விஜயராகவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
The post மைவி 3 ஆட்ஸ் நிறுவன ஓனரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.