கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இருதரப்புக்கும் கடுமையான சண்டைகள் நடக்கிறது. கடந்த நவம்பர் முதல் மியான்மர் நகர மக்கள், இந்தியாவின் மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி வருகின்றனர். இவர்களில் மியான்மர் ராணுவ வீரர்களும் அடக்கம். இவ்விவகாரம் இந்திய அரசின் பாதுகாப்புக்கு சிக்கலையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
நாகாலாந்து, மணிப்பூர் உட்பட இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகளை மியான்மர் நாடானது 1,640 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலையில் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிவிப்பில், ‘மியான்மரில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்த விவகாரம் இந்தியாவுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே ரக்கைன் மாநிலத்தில் வசிக்கும் இந்தியர்கள், அப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். மேலும் ரக்கைன் மாநிலத்திற்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.
The post மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்: ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.