நான் ஏன் அண்ணாமலையுடன் சண்டையிட வேண்டும்? மோடியுடனே சண்டையிட தயார். அல்லக்கைகளுடன் சண்டையிட்டு எனக்கு பழக்கம் இல்லை. மோடியின் நிழலில் இல்லை என்றால் அண்ணாமலை அவ்வளவு தான். அவர் அ.தி.மு.க.வை அழிப்பேன் என்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர் உள்ளவரை அந்த கட்சியில் பொதுச் செயலாளராக இருப்பார். ஆனால் நீ எவ்வளவு நாள் பாஜவில் இருக்க முடியும் என்பதைப் பார்ப்போம். எங்களுக்கு மட்டும் புது சின்னம். அதிலும் பல தில்லுமுல்லு. எங்களைப் பார்த்து அவ்வளவு பயம். பா.ஜ.வில் அவ்வளவு ரவுடிகள். சாராய வியாபாரிகள், மணல் அள்ளி விற்றவன் எல்லாம் உள்ளனர். இவர்கள்தான் தற்போது கோவையில் அண்ணாமலைக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்றார்.
* விஜய் ஆதரவா?
கூட்டத்தில் சீமான் பேசுவதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மைக்கை கையில் எடுக்கவா, கேம்பைனை ஸ்டார்ட் பண்ணவா என அண்ணன் பாடியுள்ளார். இதன் மூலம் அண்ணனின் மறைமுக ஆதரவு நமக்கு உள்ளது என தெரிவித்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
The post மோடியின் நிழலில் இல்லை என்றால் அவ்ளோதான்: அண்ணாமலை அல்லக்கையுடன் சண்டையிட நான் தயாரில்லை; சீமான் ஆவேச பேச்சு appeared first on Dinakaran.