சந்திர சேகர ராவ் தனது மகனை முதலமைச்சராக்க விருப்பம் தெரிவித்த போது, அதற்கும் தாம் எதிர்ப்பு தெரிவித்ததாக மோடி குற்றம் சாட்டினார். அதன் பிறகே சந்திர சேகர ராவ் தனது எதிரில் கூட முகம் காண்பிக்கவில்லை என்றும் மோடி தெரிவித்தார். இதனை மறுத்துள்ள சந்திர சேகர ராவ்வின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவ், மோடி ஒரு அப்பட்டமான பொய்யர் எனவும் பாஜக கூட்டணியில் சேரும் அளவிற்கு செல்ல எங்களை வெறிநாயா கடித்துவிட்டது எனவும் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பேசிய அவர், “மோடி திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதத் தொடங்கலாம். சிறந்த கதை ஆசிரியராக அவர் வலம் வரலாம்.பிரதமர் கூறும் கதைகளுக்கு அவரது நடிப்பிற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கூட கிடைக்கும். என்டிஏ கூட்டணியில் எங்களை சேர்த்து கொள்ளவில்லை என கூறுகிறார். அதில் சேரும் அளவிற்கு எங்களை வெறிநாய் கடித்துவிட்டதா ?,” என காட்டமாக தெரிவித்தார்.
The post மோடி நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கிடைக்கும்.. பாஜகவில் சேருமளவிற்கு எங்களை வெறிநாய் கடித்துவிட்டதா? : தெலங்கானா அமைச்சர் காட்டம் appeared first on Dinakaran.