இந்தப் படங்களில் நடிக்க அனுமதி வேண்டும் என்று கூறி நான் அமித்ஷாவிடம் ஒரு கடிதம் கொடுத்தேன். அவர் அந்தக் கடிதத்தை கோபத்தில் தூக்கி வீசி விட்டார். சினிமாவில் நடிக்க அனுமதி கிடைக்காவிட்டாலும் எனக்கு கவலை இல்லை. செப்டம்பர் 6ம் தேதி ஒற்றக்கொம்பன் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சினிமாவில் நடிக்கும் காரணத்திற்காக அமைச்சர் பதவியை விட்டு என்னை நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. சினிமா இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன். இவ்வாறு பேசினார். சுரேஷ் கோபியின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The post அமைச்சர் பதவியை விட சினிமா தான் எனக்கு முக்கியம்: சுரேஷ் கோபி கூறுகிறார் appeared first on Dinakaran.