தேனி அருகே அரண்மனைப்புதூர் பகுதியில் துவங்கிய இந்த நடைப்பயிற்சி கொடுவிலார்பட்டி, அய்யனார்புரம், கோட்டைப்பட்டி வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நிறைவு பெற்றது. மொத்தம் 8 கி.மீ. தூரம் அமைச்சர் மா.சுப்ரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அமைச்சருடன் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்ரே உள்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள், ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
The post நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் தேனியில் அமைச்சர் நடைப்பயிற்சி: 300 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.