இந்த நிலையில், யூ ஜி சி – நெட் தேர்வுகளை இன்று சென்னையில் பல மையங்களில் நடத்துவதற்கு சு.வெங்கடேசன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவத; ஒன்றிய அரசின் உயர் கல்வித்துறை யூ ஜி சி – நெட் தேர்வுகளை இன்று சென்னையில் பல மையங்களில் நடத்துகிறது. மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை ஒன்றிய கல்வித்துறை அறியாதா?. தேர்வுத் தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள். என அவர் பதிவிட்டுள்ளார்.
The post மிக்ஜாம் புயலின் பாதிப்பில் இருந்து சென்னை மீளவில்லை.. தேர்வுத் தேதியை மாற்றி மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்.. ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன், எம்.பி கண்டனம் appeared first on Dinakaran.