அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அதிகாலை உயிரிழந்தார். எனவே, தனது நண்பனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக சக்தி அன்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலில் சென்றுள்ளார். நண்பனின் சடங்கில் கலந்துகொண்ட நிலையில் திடீரென சக்தி மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை, மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சக்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், வியர்வை சுரக்கும் சுரபிகள் வேலை செய்யாமல் இருந்ததாலும், மற்ற இணை வழி பாதிப்புகள் இருந்ததாலும் சக்தி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
The post நண்பரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 17 வயது சிறுவன் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பரிதாப பலி: சென்னை அருகே சோகம் appeared first on Dinakaran.