மேலூர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ1லட்சம் கொள்ளை!!

மதுரை: மேலூர் அருகே பணி முடிந்து ஆட்டோவில் பணம் எடுத்துச் சென்ற டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பெருமாள்பட்டி கிராமத்தில் பணி முடிந்து இரவு ஆட்டோவில் சென்றபோது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மர்ம கும்பல் ரூ.1 லட்சம் பணத்தை பறித்து கொண்டதோடு, ஆட்டோ ஓட்டுனர் தலையில் வெட்டி விட்டு சென்றுள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள் ராஜ்குமார், பாண்டியராஜன், ஆட்டோ ஓட்டுனர் திருமலைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post மேலூர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ1லட்சம் கொள்ளை!! appeared first on Dinakaran.

Related Stories: