இந்த பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் 289 மாணவர்கள், 288 மாணவிகள் உள்பட 577 பேர் சேர்ந்துள்ளனர். அதேபோன்று, தமிழ் வழிக்கல்வியில் 44 மாணவர்கள், 34 மாணவிகள் உள்ளிட்ட 78 பேர் சேர்ந்துள்ளனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 655 ஆகும். 30 ஆசிரியர்களின் பணியிடம் முதற்கட்டமாக நிரப்பப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர். மேலக்கோட்டையூர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன், தாழம்பூர் ஆய்வாளர் சார்லஸ், பள்ளி தலைமை ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர்.
The post மேலக்கோட்டையூரில் ரூ.17.43 கோடியில் அரசு மாதிரி பள்ளி: முதல்வர் காணொலி காட்சி மூலம் திறப்பு appeared first on Dinakaran.