இந்நிலையில், தமிழ்நாடு அலைச்சறுக்கு விளையாட்டு சங்கம், இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு சார்பில் ‘‘மகாப்ஸ் பாயின்ட் பிரேக் சேலஞ்ச்’’ என்ற பெயரில் 2 நாள் நடக்கும் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி நேற்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு அருகே தொடங்கியது. இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட அலைச்சறுக்கு வீரர்கள், வீராங்கனைகள் சீறி வரும் கடல் அலையில் அலைச்சறுக்கு பலகை மூலம் சாகசங்களை நிகழ்த்தி அசத்தினர். இதனை ஏராளமான சுற்றுலாவாசிகள் கண்டு ரசித்தனர். இப்போட்டியில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதன் மூலமாக இந்தியா சார்பில், சர்வதேச போட்டியில் பங்கேற்க 10 வீரர்கள், 5 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் தேசிய அலைச்சறுக்கு போட்டி தொடக்கம்: 100 வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.