மழையின் காரணமாக குளுமையான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. காய்ந்த மரங்கள் மீண்டும் துளிர் விட்டு பசுமையாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டம் பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, சிறுவன் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, கொல்லிமலையில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இப்போது மழை குறைந்து விட்டதால், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி ஆகியவற்றில் தண்ணீர் இதமாக கொட்டுகிறது. இதன் காரணமாக, நேற்று தடை விலக்கப்பட்டு, கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வார விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post கொல்லிமலை அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.