அவர்களில் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், ஜெயகண்டனையும் பாபுவையும் சோதித்து பார்த்து இறந்துவிட்டதாக கூறிச் சென்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இரவில் பார்பிக்கியூ அடுப்பை அணைக்காமல், போதையில் படுத்து உறங்கிய போது, புகை மூட்டத்தில் மூச்சு திணறி, உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. மேலும் மதுவோ அல்லது கேட்டுப்போன சிக்கனோ உயிரிழப்புக்கு காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறு ஆய்விற்கு பின்னர், முழுமையான தகவல் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
The post கொடைக்கானல் விடுதி அறையில் 2 இளைஞர்கள் மர்ம மரணம் : பார்பிக்கியூ அடுப்பை அணைக்காமல் உறங்கியதால் மூச்சுத்திணறி பலியா? appeared first on Dinakaran.