குறிப்பாக ஊட்டி அருகே உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி, காட்டேரி நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துச் சொல்வது வழக்கம். கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்துச் செல்வார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்து அளவிற்கு பெய்யவில்லை. இதனால், அனைத்து அணைகளிலும் தண்ணீர் குறைந்தே காணப்படுகிறது. மேலும் நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. ஊட்டி அடுத்து உள்ள கல்லடி நீர்வீழ்ச்சியிலும் தற்போது தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்து விழுவதால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
The post கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்தது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.