தனது தாயார் இந்திரா காந்தி எழுதி வைத்த தனது சொத்துக்கள் அரசாங்கத்திற்கு சென்று விடுவதை தடுக்கத்தான் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி பரம்பரை சொத்து வரியை ரத்து செய்தார். அதன் பிறகு 4 தலைமுறைகள் தங்களுடைய சொத்துக்களை அனுபவித்து பலன் பெற்ற பிறகு, இப்போது மீண்டும் பரம்பரை சொத்து வரியை கொண்டு வர காங்கிரஸ் விரும்புகிறது. பாஜ இருக்கும் வரை பரம்பரை சொத்து வரி விதிப்பு போன்ற எந்த சட்டங்களும் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ் அரசு அமைந்தால், உழைத்து, கஷ்டப்பட்டு நீங்கள் சேர்த்த சொத்துக்கள் உங்களிடமிருந்து கொள்ளையடிக்கும். அதை தடுக்கும் தடுப்பு சுவராக நான் இருப்பேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார்: பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.