தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வருண் ராஜ் புச்சா உயிரிழந்துவிட்டதாக பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக சமூகம் ஒருவரை இழந்துவிட்டதாகவும், வருணின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 16ம் தேதி உயிரிழந்த வருணை நினைவுகூரும் வகையில் இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்த வருண் ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
The post கடந்த மாதம் கத்தியால் தாக்கப்பட்ட இந்திய மாணவர் பரிதாப பலி appeared first on Dinakaran.