பாட்னா: 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்தும் ஒரே நோக்கத்துடன் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட 29 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் 4வது கூட்டம் கடந்த டிசம்பர் 19ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ், “இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அடுத்த கூட்டம் பற்றிய அறிவிப்பு விரைவில் வௌியிடப்படும்” என்று கூறினார்.
The post இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் பற்றி விரைவில் அறிவிப்பு: தேஜஸ்வி யாதவ் தகவல் appeared first on Dinakaran.