வாகனத்தில் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்திருந்த நிலையில், அவற்றில் 45 பெட்டிகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்கள் இருந்தன. நகையை கொண்டு வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பிரபல நகை கடைக்கு தங்க நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்ததுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் ஓசூர் சார் ஆட்சியருடன் தேர்தல் அலுவலருமான பிரியங்கா மூலம் பெறப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
The post ஓசூர் அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் பெட்டி, பெட்டியாக பறிமுதல்: ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.